யாழ்ப்பாண யூரியூப்பர் கிருஷ்ணா மல்லாகம் நீதிமன்ற ஆணையின்படி மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். அதன்படி எதிர்வரும் 23ம் திகதிவரை இவரது விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.
இவரை பிணை எடுப்பதற்கு கடுமையாக முயன்ற சட்டத்தரணியின் வாதம் நீதிமன்றத்தால் புறந்தள்ளப்பட்டு கிருஷ்ணாவை மீண்டும் விளக்கமறியலில் வைத்துள்ளது.
மாணவி ஒருவரை அவரது விருப்பமின்றி காணொளி எடுத்து வெளியிட்ட சம்பவம் தொடர்பில் யூரியூப்பர் கிருஷ்ணா கைதாகி இருந்தமை குறிப்பிடத்தக்கது.